மாமா!நீ தாலி அவசியமா எனும்முற் போக்குச் சிட்டு...

https://image3.affcoder.com/storage/images/1701538212xd4if4Y8g5bXMSxsW1te.jpg

நீரோடை யுள்உன் நினைவுள் பதியநான்                               

முழங்கால் தெரிந்திட இருவிரல் தொட்டு                                     

உயர்த்திடஅழகொடு பாவாடை! – உன்                                                

உள்ளக் களிப்பில் காதல் இணையுது நுகர

கொடி பூத்திட்ட தாலேஇதழ் தேன்வாடை!

உனதுகரம் தொடஊ டிடுதுக் காதல் பூஆடை


மாமா!நீ தாலிஅவ சியமாஎனும் முற்போக்குச் சிட்டு                 

ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு 

மோதிரம் அணியும் மணஓ  சையில் பகலிலும்

தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகுமோ!?



அம்மா மெளனத்தில் வானம் நோக்கும்                           

கோயில்கோ புரசிலை என்னிடம்                                     

இன்று மயங்கி தயங்கி பேசிடுது!


ஆகா கொடிகண் தழுவிடும் பூசைை தேசத்தை                           
ஏக கொழுகொம்பு  தன்னை தந்திட்டது!

பூகாண மொட்டுச் சிரிக்கின்றது – கவிதை                             

தேணாக நாணாமல் சுரக்கின்றது

                                                                                        
நெகிழ்ந்திட்ட  நிலவொளி முகிழுக்குள் நுழையுது!

முகிழ்ந்திட்ட  இரவுக்குள் அகிலமும் சுழலுது!


பாற்கடல்​மேல் துயலா பரந்தாமன் க​தையாய்

பாம்பு படகாய்நான் மாறநீ உறங்க

பட​கோட்டி மகளா​க ஆகி பட​காடிட

உனக்காக, முகம்ஊ டாது ​நோக்க…

[இது கனவில்…]

 

விடி​வெள்ளி மு​ளக்க – என்

மடிமீது நீ விழிமூடி அதிகா​லை

மயங்க நான் முயங்க…

 

கா​லை உண​வை என்வாயில்

நீ ஊட்ட ​செட்டும் உன்

உமிழநீ​ரை

நான் ​தேனாக து​டைக்க

 

அலுவலகம் புறப்படும் ​நேரம்

இருசக்கர ஊர்தியில் உன்பின் நான்

பின்இருக்​கையில் அமர…

என்இடதுகரம் உன்இடுப்​பை பற்ற

வலது கரம்  உன் ​தொ​டை​யை வருட…

 

அலுவலகத்தில்  வரு​கை​யை உறுதி​செய்து

​கை​யொப்பமிட்டுப் பிரி​கையில்

என்​னைநீ ஒருமாதிரி பார்க்க

பிரிவுஏக்கம் என்​னையும் தாக்க

 

ஓர் அ​ரை மணி​நேரம் விலகல் தாளாமல்

என்இருக் கைக்குநீ வந்து

​தேனீர் அருந்த அ​ழைக்க…

 

கா​லை உணவு உண்ட   

நிகழ்வுகள் மதிய ​வே​​ளையிலும்

மாறாமல்அன்புப் பரி

மாறல்கள் நிகழ

 

பார்த்​தோரில் பலர் இக்காட்சி​யை ரசிக்க

ஒரு சிலர் தூ  பட்டப் பகலில்

வெட்கங் ​கெட்ட பிறவிகள்

என்று நம்​மைத் தூற்ற

 

அலுவல் ​நேரம் மா​லை வர

முற்றுப்​பெற

க​டற்க​ரை சா​லைவழி

இருவரும் கை​கோர்த்து நடக்க

போகிறவனும் வருகிறவனும்

திரும்பித் திரும்பி  

நம்​மைப் ​பார்த்து கிளுகிளுக்க…

 

இப்படி எல்லாம் நடந்துற என்று

ஆ​சைகள்என் மனதுள்

எப்​போதும் உலாவ...

 

ஒவ்​வொரு நாளும் என் காதலா…

என் காதலா என

எண்ணங்களுள் தாபம்து ளாவ

 

இப்படி ஓர் ஏக்கம் பல ஆண்டுகளாக

என் இதயத்​தை து​​ளைக்க

ஆ​சைக​ளெல்லாம்...

 

நி​றை​வேறாமல் மடிந்துற்றன​வே!

மத ​பேதங்கள் நம் இருவ​ரையும்

பிரித்திட்டன​வே!

 

கடவுள் இருந்தால் நமக்குள்

இப்படி ஓர் பிரிவுத் துயரம்

நிகழ விடுவா​னோ?


பார்வையிடு: Universe Taylor > Solar [Willswords M] > Moons reflections!: என்​னைக் கனவிலாடி ஈ​ரோடு ​போனவ​னை...


Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்

கவிதை குயில் பாடல்கள்!