கட்டுக் குழலசைய காதல்நீ செய்என்றே ... முட்டுதேஉன் மெளன விழிகள் ! பட்டுப்பா வாடையாள் பாவைநான் உன்னைநோக்க கட்டிடு ( து ) ஏன் காதல்கூ டுசிட்டு ! கூடுகண்டு காதல் குமரி நகைக்கஉன்னுள் ; ஆடிடாதோ ஆசைசிட்டு ஊஞ்சல் ! ஊஞ்சல்அன்ன காதல்ஆட உண்ணும் விழிகள்உன் காய்ந்தமா டாகிடக் கண்டேன் ! காய்ந்தமா டாகிட்டேன் கன்னிநான் ; நாணாதே ! சாய்ந்திட்ட தேபொழுதும் தான் ! பாயும்மா டாகிடும்முன் பாய்ந்தேநீ வந்துமெல்ல ஓயவைநம் ஓசைஆசை யை ! கொடிபூக்க காய்ப்போல் குனியாதே உன்றன் மடிஈந்தி என்னுள் மகிழ் ! தொட்டாலோ மெய்சிலிர்க்கும் ; தொட்டுஅ விழஆசை , திட்டாலோ பண்உதிர்க்கும் ; தென்றல் கனியிதழ்தேன் , சொட்டால்உன் வாய்மணக்கும் ; சொக்கிமகிழ நீதாலி ... கட்டாமல் நான்மணந்தால் காதல் ! முன்னால்நீ தோன்ற முழுநில வாய்காண்பேன் தன்னால் அகலும் தவிப்பே ! எனக்கு , என் அன்பேநாம் ஒன்றஉன்னால் அந்நாள் வருமோபின் வந்தால்நான் வாழ்வேன் நெடுநாள் ! அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான் ம...
Comments
Post a Comment